வெயில் சுள்ளென்று அடிக்கும் ஒரு சித்திரை நாளில் சீதா செத்து போனாள். அசோக் நகரில் ஒரு சின்ன வீட்டில் யாரும் கவனிக்காமல், ஒரு அமாவாசை நாளில் சீதா செத்து போனாள். அவள் எதிர்பார்த்து இருந்த ராமன் வரவே இல்லை. பக்கத்து வீட்டு சாவித்ரி இரண்டு நாள் கழித்து தான் சீதாவை தேடினாள். அவளுக்கு நேரமே இல்லையே, சீதாவை பற்றி யோசிப்பதற்கு. கணவன்
சத்யனை கவனிப்பதற்கே நேரம் சரியாக போகிறது. அதனால் சீதா செத்துக்கொண்டிருந்த போது சாவித்திரி சமைத்து கொண்டிருந்தாள்.
3 comments:
onnum puriyala (for most of the recent posts)
Your blog it´s interesting but I don't understand anyting!:)
Luna how will you understand my posts? you are portugese :-)
Post a Comment